திருக்குறள்

1283.

பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக் காணா தமையல கண்.

திருக்குறள் 1283

பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக் காணா தமையல கண்.

பொருள்:

என்னை அரவணைக்காமல் தமக்கு விருப்பமானவற்றையே செய்து கொண்டிருந்தாலும், என் கண்கள் அவரைக் காணாமல் அமைதி அடைவதில்லை.

மு.வரததாசனார் உரை:

என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள் காதலனைக் காணாமல் பொருந்தவில்லை.

சாலமன் பாப்பையா உரை:

என்னை அவமதித்து அவர் தம் விருப்பப்படியே செய்தாலும் என் கண்கள் அவரைக் காணாமல் இருப்பதில்லை.